Sunday, October 24, 2010

1500 ஆண்டுகள் பழமையான மணிமங்கலம்

மணிமங்கலம் மாயோன் - 2
கோவில் முகப்பு

சென்ற ஞாயிறு காலை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 3 மணி அளவில் வீடு திரும்பி விட்டு, சரி ஓய்வெடுத்து கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்த போது, தம்பி கண்ணன் செல்பேசியில் அழைத்து எங்கேயாவது போகலாம என கேட்டார், அதற்க்கு முன்பே ஒர் நாள் நன்பர் ஆனந்த் மணிமங்கலம் அருகே இயற்கை எழில் சார்ந்த இடம் ஒன்று உள்ளது அங்கே போய் வரலாம் என சொல்லி இருந்தார். சரிஇந்த இரண்டையும் சேர்த்து ஒரு பயணம் போகலாம் என இன்னோரு நன்பர் கார்த்திகும் சேர்ந்து மணிமங்கலம் புறப்பட்டோம்.

ஆனந்த் குறிப்பிட்ட அந்த இயற்கை எழிலான இடத்தில் சில நேரம் செலவழித்து விட்டு அருகில் உள்ள மணிமங்கலம் தர்மேஸ்வரர்
கோவிலுக்கு சென்றோம். ஆனால் நேரம் ஆகிவிட்ட படியால் கோவில் பூட்ட பட்டு இருந்தது. சரி இரு முறை தரிசனம் தராத ராஜகோபாலன் இந்த முறை தரிசனம் தருவாரா என ஒரு வித சந்தேகத்துடனேயே கோவிலை நாடி சென்றோம்.

 கொடிமரமும் சன்னிதானமும்

திருநாராயனன் - மேல்கோட்டே-கர்நாடகா.

மாயவன் அருள் பொங்க ஆலயத்தை திறந்து வைத்திருந்தான். அன்று விஜயதசமி, ஆலயத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவடைந்து  
கொண்டிருந்தன.  இந்த ஆண்டு தான் தாயருக்கு நவரத்திரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியதாக மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.ரவி (டி.வி. மெக்கனிக், இப்படித்தான் அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்) அவர்கள் தெரிவித்தார். மனதில் பரவசம் பொங்க மயவனை நோக்கி ஏரக்குறைய ஒடினேன், ஆஹா நான் கண்ட காட்சி என்னால் முழுமையாக விவரிக்க இயலாதது, இதுவே ஆழ்வார்களாக இருந்தால் “அமலனாதிபிரான்” போல ஒரு பத்து பாசுரங்கள் பாடி பகவானுடன் ஐக்கியமாகி இருப்பார்கள்.


ஆராவமுதன், மாயவன், உள்ளம் கவர் கள்வன், ஸ்ரீமன் நாராயனன், வலக்கையில் சங்கமும், இடக்கையில் சக்கரமும், வலது கரம் அபயமாகவும் இன்னொரு கையில் கதாயுதத்துடனும், மேல்கோட்டே திருநாராயண பெருமாளை நினைவூட்டும் திருக்கோலத்துடன் சுமார் ஐந்தடி அல்லது ஆறு உயரத்தில் அருள்பாலிக்கிறான். தரிசித்த மாத்திரத்தில் மனதெல்லம் நிறைவானதொரு உணர்வு. இது போன்ற உணர்வு காஞ்சி பேரருளானை(வரதராஜன்)பார்த்த போது தான் எனக்கு வந்தது.


முன் மண்டபமும் கருடன் சன்னிதியும்

உடன் வந்த நன்பர்களும் தம்பியும் கோவிலை சுற்றி பார்க்க சென்று விட்டனர் , நான் மயவனை பிரிய மனமில்லாமல் அவன் அருளமுதத்தை பருகிக்கொண்டிருந்தேன்.  முன்பு குறிப்பிட்ட திரு.ரவி அவர்கள் நாங்கள் கோவிலுள் நுழைந்த போது அதே ஊரை சேர்ந்த ஒரு பக்தருக்கு ஒரு சிற்பத்தை காண்பித்து சில விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அவரை அனுகி கோவில் வரலாற்றை பற்றி விளக்குமாறு வேண்டிக் கொண்டேன். அவரும் நான் சன்னிதானத்தை சுற்றி விளக்குகள் ஏற்றி விட்டு வந்து உங்களுக்கு விளக்குகிறேன் என சொன்னார் ஆதலால் நான் மாயோனை பரவசத்துடன் பார்த்து கொன்இருந்தேன் அவர்கள் வரும் வரை.  பின்பு திரு.ரவி அவர்கள் வந்து மிகவும் அருமையாக கோவிலை பற்றி விளக்கினார்.

தாயார் சன்னிதி

 நான் இதுவரை பார்த்த பெருமாள் கோவில்களில் மிகவும் வித்தியாசமான அமைப்பில் இருந்தது இந்த பெருமாள் சன்னிதானம். வழக்கமாக
சிவன் சன்னிதிகளில் தான் சுற்று சுவர்களில் பிற தெய்வங்களின் சிலைகள்(கோஷ்ட்ட தெய்வங்கள்-தட்சினாமூர்த்தி,விஷ்ணு, துர்கை,லிங்கோத்பவர்...) பிரதிஷ்டை செய்து இருப்பார்கள். இந்த பெருமாள் சன்னிதனத்தில் அதிசயமாக கோஷ்ட்ட தெய்வங்கள் அமைக்கபட்டிருக்கின்றன அதுவும் வித்தியாசமாகஒரு பெரிய சிலை அதன் மேல் பகுதியிலே ஒரு சின்ன தெய்வ வடிவம். இடமிருந்து வலம் வரும்போது முதலில் இருக்கும் தெய்வம் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் கணபதி, அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே தட்சினாமூர்த்தி. அடுத்து ப்ரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் மஹாவிஷ்ணு அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே கையில் வெண்ணை வைத்துக்கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடும் நவனீதகண்ணன். மேற் சொன்ன இரு தெய்வங்களும் சன்னிதானத்தின் தெற்க்கு சுவற்றில். பின்புற சுவற்றில் மறுபடியும் ப்ரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் மஹாவிஷ்ணு அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே யோக நரசிம்மர்.
ஆண்டாள் சன்னிதி

 வடக்கு சுவற்றின் ஆரம்பத்தில் ஆதிசேஷன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் பரமபதநாதன் அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே காளிங்க நர்தன கிருஷ்ணன். இந்த பரமபத நாதனின் சிலை மிகவும் விசேஷமானது, கருவரையில் இருக்கும் மாயவனுக்கு செய்யப்படும் திருமஞ்சன நீர்(அபிஷேக நீர்) பரமபத நாதனின் திருவடியின் கீழே வந்து விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. மஹாவிஷ்ணு திருவிக்ரமனாக உலகளந்த போது பிரம்மன் அவரது வானளந்த திருவடிக்கு செய்த அபிஷேக நீர் தான் கங்கையாக ப்ரவாகித்தது என்கிறன்றன புரானங்கள். அதன் படி பார்க்கும் போது இந்த பெருமானின் காலடியில் வந்து வெளியேரும் நீர் கங்கைக்கு சமமான புனிதம் வாய்ந்தது. ராஜகோபாலன் திருமேனி சம்மந்தமும் பரமபத நாதன் திருவடி தீண்டலும் கொண்ட நீர் கங்கையை விடவும் புணிதமானது என்பது என் கருத்து.
நல்லாட்டூர் வீர ஆஞ்சநேயர்

 வடக்கு சுவர் முடிவில் கையில் ப்ரயோக சக்கரத்துடன் பெண் தெய்வம் ஒண்று(வைஷ்ணவி?) அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கும் பெண் தெய்வம்(திருமகள்?). இந்த இடத்தின் அருகே சன்னிதான சுவற்றில் ஒரு கல்வெட்டு சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் நிகழ்ந்த போரை பற்றி அமைந்துள்ளது.

சன்னிதானத்தின் எதிரே சற்றே வடகிழக்கில்(சனி மூலை?) சுமார் 2.5-3 அடி உயரத்தில் வீர ஆஞ்சனேயர். இந்த ஆஞ்சனேயர் திருத்தணி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள நல்லாட்டூரில் அருள் பாலிக்கும் ஆஞ்சனேயர் தோற்றத்திலேயே உள்ளார். ராஜகோபாலனை போலவே இந்த ஆஞ்சனேயரும் மிகவும் சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார்.
 ஆலய மணியும் கோவில் சுவர் கல்வெட்டும்


 யதிராஜர் ராமானுஜர்
சரியாக வட கிழக்கு மூலையில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சந்நிதி. சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், யதிராஜர் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் அருள்கின்றனர். மணிமங்கலத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருபெரும்பூதூரில் பிறந்த வைணவ குல திலகம், அடியார்களின் அரசர், யதிராஜர் ராமானுஜர் இந்த திரு தலத்திற்க்கு அவரது காலத்தில் வந்து வழிபட்டபோது மாயவன் அவருக்கு ராஜகோபாலனாக காட்ச்சி அளித்ததாகவும் அப்போதிலிருந்து இந்த இறைவன் ராஜகோபலானக அழைக்கபடுவதாகவும் கோவிலும் ராஜகோபலா சுவாமி கோவில் என அழைக்க படுவதாகவும் செவி வழி செய்தி. இந்த செய்தி மற்றும் சன்னிதனத்தில் இருக்கும் கல்வெட்டு இவற்றை கொண்டு பார்க்கும் போது இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானதாக(தஞ்சை பெரிய கோவிலைவிடவும்) இருக்கவேண்டும் என தெரிகிறது. 
 பெரியார் மழலையர் தொடக்க பள்ளியும் ஆலயமும்

அறிவும் ஆன்மீகமும்

இந்த கோவிலை பற்றியும், மணிமங்கலம் கிராமத்தை பற்றியும் சுமார் 2 மணி நேரம் மிகவும் அழகாகவும், பல்வேறு விஷயங்களையும் மேற்கோள் காட்டியும் பொறுமையுடன் விளக்கி சொன்ன திரு.ரவி அவர்களுக்கு நான் எவ்வளவு நண்றிகள் சொன்னாலும் பத்தாது. இன்னும் இரண்டு பெருமாள் கோவில்களையும் சிவாலயங்களையும் தரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவற்றை பற்றியும் எழுதுவேன்.  சென்னைக்கு அருகே இருக்கும் அனைவரும் ஏன் உலகில் இருக்கும் அனைவருமே வந்து இயற்கை எழிலை ரசித்தும் இறைவன் அருளைய பெற்றும் மகிழ்ந்திக்க வேண்டும்மாறு ராஜகோபாலன் அருள்வானாக.




குறிப்பு: - சென்னை தம்பரத்தில் இருந்து 55N(தமிழ்நாடு அரசு பேருந்து), 583c(மாநகர பேருந்து) ஆகிய பேருந்துகள் மணிமங்கலம் செல்லும்,
மணிமங்கலத்தில் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கே விசாரித்தாலேயே கோவிலுக்கு வழி சொல்வார்கள், நடக்கும் தூரம் தான்.

6 comments:

ஆன்மீகன் said...

இந்த விஷயங்களை பற்றி எழுத ஊக்கமளித்த தம்பி கண்ணனுக்கு நன்றிகள்.

navaneth said...

Its amazing experience to visit the temple on the vijayadasami naal. I saw so many temples in Chennai and tamilnadu but nobody explain about temple like this. Mr.Ravi explain about the temple is awesome. So many many thanks to Mr.Ravi.

Unknown said...

I am living near to this temple area but haven't visited. Your blog kindled my interest :) Waiting to see perumal..Can you also pls mention that "Iyarkai ezhilaana idam" near to that manimangalam?

ஆன்மீகன் said...

"Iyarkai ezhilaana idam" was before 4 years, that is between Manimangal and Karasangal.

Chockalingam.SP said...

Excellent narration. I am planning to visit Manimangalm, can you please provide me with Mr. Ravi's contact details.

Anonymous said...

Article is almost 7 Years Old, Mr.Ravi is not in Contact with Temple. you can contact Temple Priest(Lives in the same street where temple is located)

Post a Comment