Monday, November 4, 2013

நல்லிணக்கம் ஏற்படுத்தும் எழிச்சூர் நல்லிணக்கேஸ்வரர்.



படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்.


மேலும் விவரங்களுக்கு:-


http://www.srinallinekeswarartrust.com


பஸ் ரூட் - சென்னை தாம்பரத்தில் இருந்து எழிச்சூர் பஸ் (தடம் எண் 55P). பேருந்து சேவை ஒரு நாளைக்கு  2 அல்லது 3 முறை தான்.

சாலை மூலம் - தாம்பரம் இருந்து காஞ்சிபுரம் சாலை தாம்பரம் எடுத்து, படப்பை பின்னர்,  ஒரகடம் சந்திப்பு தாண்டிய பின்னர், எழிச்சூர் கூட்டு ரோட் உள்ளது. ஒரகடம்  சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பற்றி ஒரு மகா மேரு தியானா நிலையம் உள்ளது. ஒரு
எழிச்சூர் கூட்டு ரோட்   மகா மேரு தியானா நிலையம் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குறுகிய சாலையில் இடது புரம் திரும்பி விட்டு  எழிச்சூர்  கிராமம் அடைய  3 கி.மீ. பற்றி மேலும் செல்ல வேண்டும்.

Monday, January 3, 2011

திருமயிலை சப்த(ஏழு) சிவாலயங்கள்

கயிலையே மயிலை மயிலையே கயிலை ஏன்?


”தருமம் மிகு சென்னை” என அருட்பிரகாச ராமலிங்க வள்ளலாரால் பாடப்பெற்ற புண்ணியம் வாய்ந்த சென்னையின் முக்கியம் வாய்ந்த இடம் திருமயிலை என போற்றப்படும் மயிலாப்பூர். பழங்காலத்தில் மயில்கள் நிறைய வசித்து ஆர்பரித்து கொண்டிருந்த ஊர் ஆகையால் மயிலாப்பூர் (மயில்+ஆர்ப்பு+ஊர்).

”மட்டிட்ட புன்னையின் கானல் மடமயிலை” என்று திருஞான சம்பந்தராலும் ”மாட மாமயிலை திருவல்லிக்கேனி கண்டேனே” என திருமங்கை ஆழ்வாராலும் படப் பெற்றுள்ளதால் இத் தலம் பல நூற்றாண்டுகள் முன்பாகவே புகழ்பெற்ற தலமாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார், 12 ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் ஆகியோர் அவதரித்த தலமாகும். இவ்வளவு ஏன் உலகப்பொது மறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் கூட இங்கே தான் பிறந்ததாக சொல்வோரும் உண்டு.

திருமயிலையின் பெருமைகளை ஒரு நாள் முழுதும் எடுத்துறைக்கலாம் அத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த ஊர் இத்திருமயிலை. இப்போது நாம் கான இருப்பது தனி சிறப்புகள் பல கொண்ட மயிலையின் ஒன்றான ஏழு சிவாலயங்கள். இந்த ஏழு சிவாலயங்களை தனித்தணியாக ஒவ்வோர் நாள் தரிசிப்பதை விட ஒரே நாளில் ஏழு ஆலயங்களையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய தரிசனம் கயிலை யத்திரைக்கு சமம் என பெரியோர்கள் நம்பிக்கை. ஆதலால் மயிலையே கயிலை கயிலையே மயிலை.
 சப்த சிவாலயங்களுக்கும் செல்லும் வழி வரைப்படம்

தீர்தபாலீஸ்வரர் கோவில்

கால மாற்றத்தினால் இன்றைய கால கட்டத்தில் மேதை நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை,திருவல்லிக்கேனி பகுதியில் இருந்தாலும், திரிபுரசுந்தரி உடனுறை தீர்தபாலீஸ்வரர் கோவில் திருமயிலையிலேயே இருந்தது முன் காலத்தில். இந்த கோவிலை சுற்றி 64 தீர்த்த குளங்கள் இருந்தனவாம் அக்காலத்தில், மிகப்பெரிய தீர்த்தமாக வங்க கடலும் கோவிலுக்கு சற்று தொலைவிலேயே இருப்பதால் தீர்த்தங்களை பாரிபாலனம் செய்யும் ஈஸ்வரர்= தீர்த்தபாலீஸ்வரர். சூரியனை நோக்கி நீர் விடுவதான ”அர்கியம்” இங்கு முன் காலத்தில் முனிவர்களாலும் சித்தர்களாலும் செய்யப்பட்டதாக நம்பிக்கை. சிறிய கோவில் தான் ஆனால் மிகவும் பழமையானது அமைந்திருக்கும்சுற்றுபுறத்திற்கு மாறாக கோவிலின் உள்ளே அமைதி தவழ்கிறது. திருபுரசுந்தரி அம்மன் பெயருக்கு ஏற்றவாரே அருளும் அழகும் பொங்க காட்சி அளிக்கிறார். நீர் சார்ந்த உணவுகளான பாயசம், பானகம் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைத்து வழிபட்டு எல்லோருக்கும் பகிர்ந்தால் நலம் பல பெறலாம்.

தீர்த்தபாலிஸ்வரர் கோவில் முகப்பும் சன்னிதியும்  

விருப்பாக்ஷீஸ்வரர் கோவில்


”வேண்டும் வரம் அளிக்கும் விருபாக்ஷீஸ்வரர்” என பாபநாசம் சிவன் அவர்களால் பாடப்பெற்றவர் இந்த ஈஸ்வரர். விருப்பங்களை தன் கண் பார்வையலேயெ தீர்த்து வைக்கும் ஈஸ்வரர் ஆகையால் விருப்பாக்ஷீஸ்வரர். அம்மன் விசாலாக்க்ஷி. அக்ஷம் அன்பது கண் என பொருள், அப்பனும் அம்மையும் தங்கள் கண் பார்வையாலேயே எல்லா துயர்களையும் தீர்ப்பவர்கள். என் கருத்துப்படி இந்த ஏழு சிவாலயங்களில் மிகவும் பழமையானதாக காணப்படுவது இந்த கோவில் தான். பெரிய ஆவுடையாரில் அமைந்த பெரிய லிங்க திருமேனி. கோவில் அக்கிரமிப்பாளர்களிடம் அகப்பட்டு சற்றே மோசமான நிலையில் கானப்படுகிறது. ஏதோ கட்டுமானப்பனிகள் வேறு நடைபெற்று வருகிறன. விவரங்கள் தெரியவரும்போது மேலும் எழுதுகிறேன்.

விருப்பாக்ஷீஸ்வரர் கோவில் 



மல்லீஸ்வரர் கோவில்


முன் காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் அமையப்பெற்றதால் மல்லீஸ்வரர் என்பது அர்ச்சகர் சொன்ன செய்தி. மரகதாம்பிகை சமேதராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார் மல்லீஸ்வரர். மல்லிகையின் வாசம் போல பக்த்தர்கள் மனதில் பரவசம் ஏற்படுத்தும் ஈஸ்வரர். நமது
மனமாகிய மலரை நற்சிந்தனையோடு இறைவன் திருவடியில் சமர்பித்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள்பல. அது அகவழிபாடு. புறவழிபாடாக மனம் மிகுந்த மலர்களையும் உணவு வகைகளையும் தாமரை இலையில் படைத்து வழிபட்டு பகிர்வது இந்த கோவிலில் சிறப்பு.


மல்லீஸ்வரர் சந்நிதானமும்  கோபுரமும்


காரணீஸ்வரர் கோவில்


ஸ்வர்ண லதாம்பிகை என்றழைக்க பட்ட பொற்கொடி அம்மன் உடனுறை காரணீஸ்வரர். காரணம்+ஈஸ்வரர் = காரணீஸ்வரர், எளிதிலேயே பொருள் விளங்குஙிறது, எல்லாவற்றுகும் காரணமான ஈஸ்வரர் என்பது. உலகில் நடக்கும் ஒவ்வோர் விஷய்த்திற்கும் ஓர் காரணம் உண்டல்லவா? அத்தனை காரணத்திர்கும் இறைவன் தான் காரணம் என்பதை உனர்த்தும் ஈஸ்வரன். குடும்ப உறவுகள் பினி இன்றி நலமாக வாழ இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து 6,12,18,24 ஆகிய அறு வரிசைவில் ஏற்றி இறைவனை வலம்
வந்து வழி படுதல் நலம்.


காரநணீஸ்வரர் கோபுரமும் கொடி மரமும்


காரணீஸ்வரர் கோவில் உள்ளிருந்து



வாலீஸ்வரர் கோவில்

பெரிய நாயகி அம்மன் உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவில் அமைவிடம் தெரியாத படி அக்கிரமிப்பாளர்களால் மறைக்கபட்டிருக்கும் முக்கியமான திருத்தலம். புராண கதைகளின் படி வாலி மிகவும் பலம் வாய்ந்த வானரன். தன்னை எதிர்பவர்களின் பலத்தின் பாதியை தனக்கிகொள்ள வரம் பெற்றவன், அத்தகைய வாலி தனது ஆன்ம பலத்திற்காக இறைவனை வழிபட்ட தலம் இது. இறைவன் சந்நிதியிலே கைகூப்பி வனங்கியபடி வாலி இருக்கிறார். வாலி வழிபட்டதாக சொல்லப்படும் தலங்கள் எல்லாம் ஹனுமான் தனது சாபம் நீங்க வழிபட்ட இடங்களே என்ற கருத்தும் உள்ளது. இங்கே அமைந்துள்ள பஞ்ச லிங்கங்கள் சந்நிது விஷேசமானது, சித்தர் ஒருவரின் ஜீவ சமாதியின் மேலே இந்த பஞ்ச லிங்க சந்நிதி அமைந்துள்ளதாக தகவல். உடல், மன பலம் பெற இத்தலம் வந்து வழிபட சிறந்தது.


வாலீஸ்வரர் கோவில்

வெள்ளீஸ்வரர் கோவில்


வெள்ளி= நவ கிரகங்களில் ஒருவரான அசுர குரு சுக்கிராசாரியார்.

அசுர குருவான சுக்கிரன் வாமனரால் பரிபோன தன் ஒரு கண் பார்வையை திரும்ப பெற இறைவனை வழிபட்ட தலம். சுக்கிராச்சாரியார் வனங்கி வழிபடும் வகையில் இருக்கும் இலிங்க திருமேனியை இன்றுன் இங்கே காணலாம். காமாக்ஷி அம்மன், சைவ வைணவ சண்டையால் உருவாக்க பட்ட சரபேஸ்வரரின் புதிதாக அமைக்கப்பட்ட சந்நிதி ஆகியவையும் இங்கே உண்டு. கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க இங்கே வழிபடலாம். சித்திரக்குளம் என அழைக்கப்படும் குளம் ஆதியில் சுக்கிரக்குளம் என ஒரு தகவல் உண்டு. கண் த்ரிஷ்ட்டி நீங்க இந்த பெருமானை வழிபட வேண்டியது அவசியம்.


வெள்ளீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவில்


இந்த கோவிலின் பெருமைகளை சுருக்கமாக சொல்ல இயலாது ஆதலால் பிறகு ஒரு தனி பதிவு இந்த கோவிலை பற்றி எழுதுவேன். நினைப்பதெல்லம் தரும் கற்பக விருட்ச்சம் போல வரங்களை அள்ளி தரும் கற்பகாம்பாள், நர்த்தன வினாயகர்,சிங்கார வேலர், சந்நிதிகளுடன், பெரிய அழகிய திருகுளத்துடன் அழகிய பெரிய கோவில். இந்த கோவிலின் பிரசாதம் மிகவும் ருசியானது. மேலும் விவரங்கள் அடுத்த பதிவில்.
கபாலீஸ்வரர் கோவில் உள்ளே



அனைத்து கோவில்களுக்கும் சென்று தரிசித்து வழிபட்டு சிவன் அருள் பெறுக.


குறிப்பு:-

படங்களை கிளிக் செய்தால் பெரிய அளவில் பார்கலாம்

Monday, December 27, 2010

தென்னகத்தின் திரிவேனி சங்கமும் திரிமூர்திகளும்- திருமுக்கூடல்

திருமுக்கூடல்

திரிவேனி சங்கமம், இது வட இந்தியாவின் அலகாபாத் நகரில் அமைந்துள்ள ஒரு புண்ணிய க்ஷேத்திரம். இந்தியாவின் முக்கிய புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கையும் யமுனையும் சரஸ்வதி நதியுடன் கலக்கும் இடம். கங்கையும் யமுனையும் கலப்பது கண்களுக்கு தெரிந்தாலும் சரஸ்வதி நதி கண்களுக்கு தெரியாது. சரஸ்வதி நதி உள் முகமாகவே சங்கமிப்பதாக நம்பிக்கை.

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களின் ஒன்றான காஞ்சி மாநகரின் அருகே அமைந்திருக்கும் கிராமம் திருமுக்கூடல். செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் வாலாஜபாதிற்கு சில கிலோமீட்டர்கள் முன் அமைந்துள்ள பழைய சீவரம் அருகே அமைந்துள்ளது இந்த திருமுக்கூடல். திருமுக்கூடல் என்ற பெயரிலேயே நமக்கு விளங்குவது இங்கே ஏதோ மூன்று விஷயங்கள்
கூடுகின்றன என்பது.


ஆலய முகப்பு

 மண்டபமும் கொடிமரமும்
ஆம் இங்கே கூடுவது ”பாலாறும்” அதன் கிளை நதிகளான ”செய்யாறும்” ”வேகவதியும்”. வட திரிவேனி சங்கமம் போல் இல்லாமல் இங்கே மூன்று நதிளும் கண்களுக்கு தெரிவது சிறப்பு. இதை தவிர இன்னொறு முக்கூடலும் இங்கே சிறப்பு. பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் முக்கூடல்.

இந்த திருமுக்கூடல் கிராமத்தின் வெளியே ஆற்றின் கரையில் இந்திய தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் அமைந்திருப்பது அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோவில். திருமால் நின்ற நிலையில் சங்கு சக்கரங்களோடு சுமார் 7-8 அடிகள் உயரத்தில் மார்கண்டேயரும் பூமாதேவியும் மண்டியிட்டு வணங்கி இருக்க திருக்குடந்தை அருகில் அமைந்துள்ள ஒப்பிலிஅப்பனை நினைவுபடுத்தும் தோற்றத்தில் அருள் பொங்க அமைந்துள்ளார்.
 ஆலய விமானம்


ஆலய சுவர்களில் கல்வெட்டுகள்

இந்த பெருமாள் மார்கண்டேயருக்கு ரங்கநாதராக, பூமாதேவிக்கு கண்ணனாக, தொண்டமான் சக்கரவர்த்திக்கு திருப்பதி வெங்கடேசராகவும் காட்சி கொடுத்தாராம். தொண்டமான் சக்கரவர்த்தி திருப்பதி பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டு தனது அரசை மகனிடம் தந்துவிட்டு, திருப்பதி செல்ல நினைக்கிறார். ஆனல் பெருமாள் அவரது கனவில் தோன்றி நீ அவ்வாறு செய்ய வேண்டாம் உன் ராஜ்ஜியத்தின் மேல் படையெடுப்பு நடக்க போகிறது ஆதலால் நீ உன் மகனுடன் சேர்ந்து போரிட்டு வென்று பிறகு இங்கு வருவாய் என சொல்கிறார்.

தொண்டமான் சக்கரவர்த்தியோ பெருமாளே நீ தான் எனக்கு எல்லம் ஆதலால் நான் உன்னிடமே வருவேன் என புறப்படுகிறார், தன் பக்தனை காக்கும் பொறுட்டு பெருமாள் தனது சங்கு சக்கரங்களை அனுப்பி எதிரிகள் படையெடுப்பை முறியடிக்கிறார். பக்த்தனுக்காக அனுப்பப்பட்ட திருப்பதி வெங்கடேசனின் சங்கு சக்கரங்களும் திருமுக்கூடலிலேயே தங்கிவிட்டன. திருமலைக்கு வந்த தொண்டமானை திருமுக்கூடலுக்கு சென்றால் அங்கே மோட்சம் அளிப்பதாக செல்கிறார் திருமால்.
ஆலயத்தை சுற்றி

திருமுக்கூடலுக்கு வந்த தொண்டமானுக்கு அதுவரை ரங்கநாதராக சயன கோலத்தில் காட்சி அளித்துகொண்டிருந்த பெருமாள் நின்ற வன்னம் வெங்கடேச பெருமாளாக காட்சியளித்தார். இதை கண்டு நெகிழ்ந்து போன தொண்டமான் பெருமாள ஆரத்தழுவிகொண்டு அப்பனே வெங்கடேசா என மகிழ்ந்தார். இதனால் இப்பெருமாளுக்கு அப்பன் வெங்கடேச பெருமாள் என பெயர் வந்தது.

பாலாறூம் தூரத்தி தெரிகின்ற பழைய சீவரம் கோவிலும்

இனி எவ்வாறு இங்கே திருமூர்த்தி சங்கமம் என்பதை பார்ப்போம். இங்கே பெருமாளுக்கு சிவ பெருமானை போல ஜடாமுடியும் நெற்றிகண்ணும் உள்ளன. ஜட முடியை தரிசிக்க கார்திக மாதத்தில் கிரிடத்தை நீக்கி எண்ணை காப்பு சாற்றும் போது பார்க்கலாம், திருநாமாம் எப்போதும் மறைத்திருப்பதால் நெற்றிக்கண் தரிசனம் இயலாதது.
ஆற்றின் நடுப்பகுதியிலிருந்து ஆலயம்

சங்க சக்ர தாரியாக, திருமகள் உறை மார்பனாக இருப்பதால் திருமால். வலது திருக்கையில் பத்மம் வைத்துள்ளதாலும் தாமரை மலர் மேல் நின்றிருப் பதாலும் பிரம்மா. ஆக மும்மூர்த்தி ஸ்வரூபம். 63நாயன்மார்களில் ஒருவரான அப்பர் இந்தப்பெருமாளை பற்றி பாடியுள்ளார் என்பது சிறப்பு.

பார் வேட்டைக்கு பழைய சீவரம் வரும் காஞ்சி வரதர், லக்ஷ்மி நரசிம்மருடன் சேர்ந்து இந்த திருத்தலதிற்கும் வருவது மற்றுமோர் சிறப்பு.


அப்பன் வெங்கடேச பெருமாள்


பழைய சீவரம் வரும் அன்பர்கள் அனைவரும் தவறாது தரிசிக்க வேண்டியதலம் இது.


அப்பன் வெங்கடேசன் திருவடிகளே சரணம்.